யாழ்.வட்டுக்கோட்டையில் வீடொன்றிலிருந்து இரு பெண்களின் சடலம் மீட்பு..!

ஆசிரியர் - Editor I
யாழ்.வட்டுக்கோட்டையில் வீடொன்றிலிருந்து இரு பெண்களின் சடலம் மீட்பு..!

யாழ்.வட்டுக்கோட்டை கிழக்கு பகுதியில் வீடொன்றிலிருந்து வயோதிப பெண்கள் இருவருடைய சடலங்கள் மீட்கப்பட்டுள்ளது.

76 வயதுடைய ஒருவரும் மற்றையவர் 73 வயதுடையவர் என்றும் பொலிஸார் குறிப்பிட்டனர்.

ஒருவர் இரண்டு வாரங்களுக்கு முன்பாகவும் உயிரிழந்துள்ளார். மற்றையவர் இரண்டு நாள்களுக்கு முன்னர் உயிரிழந்திருக்கலாம் என்று நம்பப்படுகிறது.

இருவர் மட்டுமே அந்த வீட்டில் வசித்து வந்த நிலையில் அவர்களுக்கு உதவி இல்லை என்று விசாரணைகளில் தெரிவிக்கப்பட்டது.

மாதாந்த உதவிப் பணம் பெற்றுக்கொள்ளவில்லை என்று கிராம அலுவலகர் வீடு தேடிச் சென்ற போதே இருவரும் உயிரிழந்துள்ளமை தெரியவந்துள்ளது என்று தெரிவிக்கப்பட்டது

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு