ஹெரோயின் கடத்திய நபருக்கு மரண தண்டணை விதித்தது நீதிமன்றம்..!

ஆசிரியர் - Editor I
ஹெரோயின் கடத்திய நபருக்கு மரண தண்டணை விதித்தது நீதிமன்றம்..!

15 கிராம் 70 மில்லிகிராம் அளவிலான ஹெரோயின் போதைப் பொருளுடன் சைதான நபருக்கு மரண தண்டண விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. 

தெதிகம பிரதேசத்தில் வசிக்கும் 34 வயதுடைய ஒரு பிள்ளையின் தந்தை ஒருவருக்கே இவ்வாறு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

2018 ஆம் ஆண்டு தெதிகம பாடசாலைக்கு அருகில் ஹெரோயினுடன் கைது செய்யப்பட்டார்.

சந்தேக நபருக்கு மரண தண்டனை விதித்த பின், நீங்கள் ஏதாவது சொல்ல வேண்டுமா என நீதிபதி வினவியபோது, ​​

8 வயது குழந்தையை கவனித்து வருவதாகவும், தனக்காக ஆஜரான சட்டத்தரணியால் தனக்கு எதிராக முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுகளுக்கு 

உரிய முறையில் பதிலளிக்கப்படவில்லை எனவும் குறிப்பிட்டுள்ளார்.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு