யாழ்.மாவட்டத்தில் பங்கீட்டு அட்டை முறையில் சமையல் எரிவாயு வழங்கும் முயற்சிக்கு விநியோகஸ்த்தர்கள் முட்டுக்கட்டை! இராணுவ உதவியை நாட ஆலோசனை...

ஆசிரியர் - Editor I
யாழ்.மாவட்டத்தில் பங்கீட்டு அட்டை முறையில் சமையல் எரிவாயு வழங்கும் முயற்சிக்கு விநியோகஸ்த்தர்கள் முட்டுக்கட்டை! இராணுவ உதவியை நாட ஆலோசனை...

யாழ்.மாவட்டத்தில் இராணுத்தினரின் ஒத்துழைப்புடன் பொதுமக்களுக்கு விநியோகிப்பது தொடர்பாக ஆலோசனை நடத்த்பட்டுள்ளது. 

மாவட்டத்தில் குடும்ப பங்கிட்டு அட்டைக்கு எரிவாயு விநியோகிக்க மாவட்ட செயலகத்தினால் முடிவெடுக்கப்பட்டுள்ள நிலையில் 

எரிவாயு பிரதான விநியோகஸ்தர் ஒத்துழைப்பு வழங்கத் தவறியுள்ளதன் காரணமாக இராணுவத்தினரின் உதவியை நாட ஆலோசிக்கப்பட்டுள்ளது. 

மேற்படி விடயம் தொடர்பாக யாழ்.மாவட்ட செயலக உள்ளக தகவல்கள் சில கசிந்துள்ளன. 

இந்த வாரம் லிட்ரோ காஸ் நிறுவனத்தினரால் நாடுபூராகவும் எரிவாயு விநியோகிக்கப்பட்டு வரும் நிலையில் 

யாழ்.மாவட்டத்தில் எரிவாயுவினை குடும்ப பங்கீட்டு அட்டைக்கு விநியோகிக்க முற்பட்டபோது 

லிட்ரோ எரிவாயு விநியோகஸ்தர்கள் ஒத்துழைப்பு தரவில்லை என குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. 

எனினும் எதிர்வரும் நாட்களில் பிரதேச செயலகங்கள் ஊடாக கிராம சேவையாளர்களின் ஒத்துழைப்புடன் குடும்ப அட்டை மூலம் எரிவாயு விநியோகம் இடம்பெறவுள்ளதாகவும் 

அதேவேளை எரிவாயு சிலிண்டர் விநியோகிக்கும் போது எரிவாயு விநியோகஸ்தர்களால் இடையூறு ஏற்படுத்தப்படும் என்பதை கருத்திற் கொண்டு இராணுவத்தினரின் உதவியினை பயன்படுத்தி 

குறித்த எரிவாயு சிலிண்டரை பொதுமக்களுக்கு விநியோகிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் 

யாழ்.மாவட்ட செயலக உள்ளகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு