யாழ்.மாவட்ட மக்களிடம் மாவட்டச் செயலர் விடுத்துள்ள கோரிக்கை..! பெற்றோல், டீசல் விநியோகம் சீராக கிடைப்பதாகவும் அறிவிப்பு..

ஆசிரியர் - Editor I
யாழ்.மாவட்ட மக்களிடம் மாவட்டச் செயலர் விடுத்துள்ள கோரிக்கை..! பெற்றோல், டீசல் விநியோகம் சீராக கிடைப்பதாகவும் அறிவிப்பு..

யாழ்.மாவட்டத்திற்கு பெற்றோல் மற்றும் டீசல் விநியோகம் சீராக இடம்பெறுவதாக கூறியுள்ள யாழ்.மாவட்டச் செயலர் பொதுமக்கள் தேவையற்று அதிக பெற்றோல் மற்றும் டீசலை பதுக்கவேண்டாம் எனவும் கோரிக்கை விடுத்திருக்கின்றார். 

யாழ்.மாவட்டச் செயலகத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்த தொிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார். இதன்போது மேலும் அவர் கூறுகையில், 

மாவட்டத்திற்கு 6600 லீற்றர் எரிபொருள் 24 எரிபொருள் நிரப்பு நிலையங்கள் ஊடாக நேற்றய தினம் கிடைக்கப் பெற்றது. அதே அளவில் இன்றைய தினமும் கிடைக்கப் பெற்றிருக்கின்றது. 

போக்குவரத்தில் உள்ள சில நெருக்கடிகள் காரணமாகவே நடைமுறைச் சிக்கல்கள் எழுந்திருக்கின்றன. ஆனாலும் பெற்றோல் மற்றும் டீசல் சீராக கிடைக்கின்றது. பொதுமக்கள் அதிகளவில் கொள்வனவு செய்யவேண்டாம். 

தேவைக்கு ஏற்ப கொள்வனவு செய்தால் தற்போதுள்ள நெருக்கடி நிலை இருக்காது எனவும் கூறியுள்ளார். 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு