யாழ்.திருநெல்வேலியில் சமையல் எரிவாயு விநியோகத்தில் மூக்கை நுழைத்த நல்லுார் பிரதேச செயலர்..! பொதுமக்கள் குழப்பம், பொலிஸார் தலையீடு..

ஆசிரியர் - Editor I
யாழ்.திருநெல்வேலியில் சமையல் எரிவாயு விநியோகத்தில் மூக்கை நுழைத்த நல்லுார் பிரதேச செயலர்..! பொதுமக்கள் குழப்பம், பொலிஸார் தலையீடு..

நல்லுார் ப.நோ.கூ சங்கத்தின் ஊடாக சமையல் எரிவாயு விநியோகம் இடம்பெற்றிருந்த நிலையில் பிரதேச செயலரின் தலையீட்டினால் விநியோகம் நிறுத்தப்பட்டதால் வரிசையில் காத்திருந்த பொதுமக்கள் குழப்பமடைந்தனர். 

நல்லூர் பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட பகுதியில் வசிக்கும் மக்களுக்கான எரிவாயுவை நல்லூர் பலநோக்கு கூட்டுறவு சங்கத்தின ஊடாக பங்கிட்டு அட்டை அடிப்படையில் விநியோகிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டன.

அதனை அறிந்து பெருமளவான மக்கள் வரிசைகளில் நின்று பதிவுகளை மேற்கொள்ள ஆரம்பித்த வேளை நல்லூர் பிரதேச செயலர் திடீரென வந்து விநியோக ஏற்பாடுகளை இடைநிறுத்துங்கள் என உத்தரவிட்டு சென்றார்.

அதனால் நீண்ட நேரம் வரிசையில் நின்ற மக்கள் மத்தியில் குழப்பம் ஏற்பட்டதனை அடுத்து கோப்பாய் பொலிஸார் சம்பவ இடத்திற்கு வருகை தந்து மக்களை சமரசப்படுத்தினார்கள்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு