வியாபாரத்திற்காக 910 லீற்றர் பெற்றோலை கடத்திச் சென்ற பொலிஸ் அதிகாரி மற்றும் ஓய்வுபெற்ற இராணுவ சிப்பாய் கைது..!

ஆசிரியர் - Editor I
வியாபாரத்திற்காக 910 லீற்றர் பெற்றோலை கடத்திச் சென்ற பொலிஸ் அதிகாரி மற்றும் ஓய்வுபெற்ற இராணுவ சிப்பாய் கைது..!

மட்டக்களப்பிலிருந்து - அம்பாறைக்கு பெற்றோல் கடத்திய பொலிஸ் அதிகாரி மற்றும் ஒய்வுபெற்ற இராணுவ சிப்பாய் ஆகிய இருவரை பொலிஸார் கைது செய்துள்ளதுடன் 910 லீற்றர் பெற்றோல் கைப்பற்றப்பட்டுள்ளது. 

வெல்லாவெளி வீதிச் சோதனைச் சாவடியில் வைத்து நேற்று ஞாயிற்றுக்கிழமை (23) அதிகாலை கைது செய்துள்ளதாக வெல்லாவெளி பொலிஸார் தெரிவித்தனர்.

பிக்கப் ரக வாகனத்தை வெல்லாவெளி பொலிஸ் வீதிச் சோதனைச் சாவடியில் பொலிசார் நிறுத்தி சோதனையிட்டனர். இதன்போது அந்த வாகனத்தில் வெல்லாவெளி எரிபொருள் நிரப்பு நிலையத்தில் இருந்து 

வியாபாரத்துக்காக கலன்களில் மறைத்து எடுத்துச் செல்லப்பட்ட 910 லீற்றர் பெற்றோலை மீட்டதுடன் அதனை எடுத்துச் சென்ற மகாஓயா பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றிவரும் 45 வயதுடைய பொலிஸ் சாஜன் 

மற்றும் ஓய்வு பெற்ற 41 வயதுடைய இராணுவ சிப்பாய் ஆகிய இருவரையும் கைது செய்தனர். கைது செய்யப்பட்டவர்களை நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக வெல்லாவெளி பொலிசார் தெரிவித்தனர்.

மேலதிக விசாரணைகளை வெல்லாவெளி பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு