யாழ்ப்பாணம், கிளிநொச்சி, வவுனியா மாவட்டங்களை சேர்ந்த 21 பேர் கைது..!

ஆசிரியர் - Editor I
யாழ்ப்பாணம், கிளிநொச்சி, வவுனியா மாவட்டங்களை சேர்ந்த 21 பேர் கைது..!

மட்டக்களப்பு - புதுக்குடியிருப்பு கடற்கரையிலிருந்து அவுஸ்ரேலியாவுக்கு தப்பிச் செல்ல முயற்சித்த 21 பேர் இன்று அதிகாலை, விசேட அதிரடிப்படையினர் மற்றும் கடற்படையினால் கைது செய்யப்பட்டிருக்கின்றனர். 

மேலும் இரண்டு இயந்திரப் படகுகளும் கைப்பற்றப்பட்டுள்ளதாக காத்தான்குடி பொலிஸார் தெரிவிக்கின்றனர்.புலனாய்வு பிரிவுக்கு கிடைத்த இரகசியத் தகவலையடுத்து, 

வியாழக்கிழமை அதிகாலை இரண்டு மணியளவில் விசேட அதிரடிப்படையினர் புதுக்குடியிருப்பு கடற்கரையில் சுற்றிவளைத்துள்ளனர். 

இதன் போது இரு படகுகளில் அவுஸ்திரோலியாவுக்கு சட்டவிரோதமாக செல்வதற்கு தயாராகிய நிலையில் 4 பெண்களும்17, ஆண்களுமாக 21 பேரை கைது செய்ததுடன் இரு படகுகளையு மீட்டு ஒப்படைத்துள்ளனர்.

இதில் கைது செய்யப்பட்டவர்கள மட்டக்களப்பு, யாழ்ப்பாணம், கிளிநொச்சி, வவுனியா மற்றும் திருகோணமலை மட்டக்களப்பு போன்ற பிரதேசங்களைச் சேர்ந்தவர்கள் எனவும் இதன் பிரதான சந்தேக நபர் ஒருவர் தலைமறைவாகி உள்ளதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இவ்வாறு கைது செய்யப்பட்டவர்களை நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும், இச்சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளதாக காத்தான்குடி பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு