யாழ்.திருநெல்வேலி - பூங்கனிச்சோலையை அண்மித்த பகுதியில் நடந்த விபத்தில் படுகாயமடைந்த மேலும் ஒருவர் பலி..!

ஆசிரியர் - Editor I
யாழ்.திருநெல்வேலி - பூங்கனிச்சோலையை அண்மித்த பகுதியில் நடந்த விபத்தில் படுகாயமடைந்த மேலும் ஒருவர் பலி..!

யாழ்.திருநெல்வேலி - பூங்கனிச்சோலைக்கு அருகில் நேற்றிரவு இடம்பெற்ற விபத்தில் இருவர் பலியானதுடன், மேலும் 3 பேர் படுகாயமடைந்திருந்தனர். இந்நிலையில் படுகாயமடைந்த ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். 

இரண்டு மோட்டார் சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதி விபத்துக்கு உள்ளானதில் மூன்று இளைஞர்கள் உயிரிழந்துள்ளனர். கோப்பாய் பூதர் மடத்தடியை சேர்ந்த ம.மகிந்தன் (வயது 25) , கச்சேரி கிழக்கை சேர்ந்த றொ.சார்ள்ஸ் (வயது 23) மற்றும் சபாபதிப்பிள்ளை வீதி , சுன்னாகத்தை சேர்ந்த யோ.மேர்வின் டேனுஜன் (வயது 17) ஆகிய மூவரே உயிரிழந்துள்ளனர்.

ஒரு மோட்டார் சைக்கிளில் இருவரும் மற்றுமொரு மோட்டார் சைக்கிளில் மூவரும் பயணித்த வேளை பூங்கனிச்சோலைக்கு அருகில் இரு மோட்டார் சைக்கிளிலும் நேருக்கு நேர் மோதி விபத்துக்கு உள்ளானதில் , இருவர் சம்பவ இடத்திலையே உயிரிழந்துள்ளனர். 

மூவர் படுகாயமடைந்த நிலையில் யாழ்.போதனா வைத்திய சாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ள நிலையில் ஏனைய இருவரும் தொடர்ந்தும் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு