முள்ளிவாய்க்கால் பேரவல நினைவாக கஞ்சி வழங்கிய யாழ்ப்பாண முஸ்லிம் மக்கள்..!

ஆசிரியர் - Editor I
முள்ளிவாய்க்கால் பேரவல நினைவாக கஞ்சி வழங்கிய யாழ்ப்பாண முஸ்லிம் மக்கள்..!

முள்ளிவாய்க்கால் பேரவலத்தின் 13ம் ஆண்டு நினைவேந்தல் நாளை நினைவுகூரப்படவுள்ள நிலையில், யாழ்.முஸ்லிம் மக்களினால் முள்ளிவாய்க்கால் பேரவல நினைவாக கஞ்சி வழங்கப்பட்டது. 

ஐக்கியத்திற்கான யாழ்.முஸ்லிம் சமூகத்தினரின் ஏற்பாட்டில் முள்ளிவாய்க்கால் நினைவு தினத்தினை முன்னிட்டு முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கும் நிகழ்வு இன்றைய தினம் யாழ்ப்பாணம் ஐந்து சந்திப்பகுதியில் இடம்பெற்றது.

முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கும் நிகழ்வில் யாழ்ப்பாணத்தில் வசிக்கும் முஸ்லிம் இனத்தைச் சேர்ந்த முஸ்லிம் மக்கள் கலந்து கொண்டு வீதியால் பயணித்தோருக்கு முள்ளிவாய்க்கால் கஞ்சியினை வழங்கி வைத்தார்கள்.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு