யாழ்.கொழும்புத்துறையிலிருந்து கடற்றொழிலுக்கு சென்ற மீனவர் சடலமாக மீட்பு..!

ஆசிரியர் - Editor I
யாழ்.கொழும்புத்துறையிலிருந்து கடற்றொழிலுக்கு சென்ற மீனவர் சடலமாக மீட்பு..!

யாழ்.கொழும்புத்துறை பகுதியில் இருந்து கடற்தொழிலுக்கு சென்றவர் இன்று செவ்வாய்க்கிழமை சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

கொழும்புத்துறை உதயபுரம் பகுதியை சேர்ந்த அந்தோனிப்பிள்ளை டென்சில் ராஜேந்திரன் (வயது 53) என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டார். 

குறித்த நபர் நேற்று முன்தினம் திங்கட்கிழமை அதனது மகனுடன் தொழிலுக்கு சென்றவேளை கடலில் தவறி விழுந்து காணாமல்போயிருந்தார்.

இந்நிலையில் மீனவர்கள் நெடுந்தீவு கடலில் சடலமாக மிதந்த நிலையில் இன்று செவ்வாய் கிழமை சடலமாக மீட்கப்பட்டுள்ளார். 

சடலம் உடற்கூற்று பரிசோதனைக்காக யாழ்.போதனா வைத்தியசாலையில் ஒப்படைக்க பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர். 


காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு