நல்லுார் இளைஞர் கழக சம்மேளனத்தின் 2022ம் ஆண்டுக்கான பொதுச்சபை கூட்டம், தலைவராக சத்தியரூபன் துவாரகன் தொிவு..

ஆசிரியர் - Editor I
நல்லுார் இளைஞர் கழக சம்மேளனத்தின் 2022ம் ஆண்டுக்கான பொதுச்சபை கூட்டம், தலைவராக சத்தியரூபன் துவாரகன் தொிவு..

யாழ்.நல்லுார் பிரதேச இளைஞர் கழக சம்மேளனத்தின் 2022ம் ஆண்டுக்கான தலைவராக கொக்குவில் ஸ்டார் இளைஞர் கழகத்தை சேர்ந்த ஆர்.துவாரகன் தேர்வு செய்யப்பட்டிருக்கின்றார். 

நல்லுார் பிரதேச இளைஞர் கழக சம்மேளனத்தின் வருடாந்த பொதுச்சபை கூட்டம் நேற்று காலை 9 மணிக்கு அரியாலை திருமகள் சனசமூக நிலையத்தில் இடம்பெற்றிருந்தது. 

இதன்போது நல்லுார் பிரதேசத்திலுள்ள 22 இளைஞர் கழகங்களை சேர்ந்த 51 இளம் தலைவர்கள் கலந்து கொண்டிருந்தனர். அனைவருடைய விருப்பின் அடிப்படையில் தலைவராக ச.துவாரகனும், 

செயலாளராக இளைஞர் சேவை உத்தியோகஸ்த்தர் யுகராஜ், பொருளாலராக சங்கிலியன் இளைஞர் கழகத்தை சேர்ந்த ஜெவின், உப தலைவராக செல்வி கீர்த்தனா, உப செயலாளராக அங்கினி இளைஞர் கழகத்தை சேர்ந்த செல்வி கௌசிகா ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர். 


காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு