பாதுகாப்பு என்ற பெயரில் எனது வீட்டின் முன்னால் இராணுவத்தை நிறுத்தவேண்டாம்..! உடன் அகற்றுங்கள், சிறீதரன் ஜனாதிபதிக்கு கடிதம்..

ஆசிரியர் - Editor I
பாதுகாப்பு என்ற பெயரில் எனது வீட்டின் முன்னால் இராணுவத்தை நிறுத்தவேண்டாம்..! உடன் அகற்றுங்கள், சிறீதரன் ஜனாதிபதிக்கு கடிதம்..

நாடாளுமன்ற உறுப்பினர்களின் இல்லத்திற்கு இராணுவ பாதுகாப்பு வழங்கப்பட்டிருக்கும் நிலையில், 

பாதுகாப்பு என்ற பெயரில் எனது வீட்டுக்கு முன்பாக இராணுவத்தை நிறுத்தவேண்டாம். 

அவர்களை உடன் அகற்றுங்கள் என நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன் ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்துள்ளார். 

ஜனாதிபதி கோட்டபாய ராயபக்சாவிற்கு நேற்று அனுப்பியுள்ள கடிதத்திலேயே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். 

பாதுகாப்பின் பெயரால் எனது வீட்டின் முன்னால் இராணுவம் நிற்பது எனது குடும்பம் மற்றும் அயலில் உள்ள பொதுமக்களின் இயல்பு வாழ்வை பாதிக்கிறது. 

மக்களிடமிருந்து என்னை அந்நியப்படுத்துவதாகவும் அவர் அந்த கடிதத்தில் சுட்டிக்காட்டியுள்ளார். 

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு