யாழ்.கட்டைப்பிராயில் ஜன்னல் வழியாக வீட்டுக்குள் நுழைந்து வயோதிப பெண்ணின் சங்கிலியை அறுத்த திருடர்கள்..!

ஆசிரியர் - Editor I
யாழ்.கட்டைப்பிராயில் ஜன்னல் வழியாக வீட்டுக்குள் நுழைந்து வயோதிப பெண்ணின் சங்கிலியை அறுத்த திருடர்கள்..!

யாழ்.கல்வியங்காடு  - கட்டப்பிராய் பகுதியில் உள்ள வீடொன்றின் ஜன்னலை உடைத்து வீட்டுக்குள் நுழைந்த கொள்ளை கும்பல் வயோதிப பெண்ணின் 2 பவுண் தங்க சங்கிலியை கொள்ளையடித்துச் சென்றிருக்கின்றது. 

குறித்த சம்பவம் நேற்று வெள்ளிக்கிழமை அதிகாலை இடம்பெற்றுள்ளது. குறித்த வீட்டின் ஜன்னலை திறந்து உள்ளே நுழைந்த திருடர்கள் வீட்டிலிருந்த வயோதிப பெண் ஒருவரின் 2 பவுண் தங்க சங்கிலியை அறுத்து சென்றுள்ளனர். 

சம்பவம் தொடர்பில் கோப்பாய் பொலிஸாருக்கு முறைப்பாடு வழங்கப்பட்டதையடுத்து பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு