நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜனின் மக்கள் தொடர்பு அலுவலக பதாகைக்கு தீ வைத்த சந்தேகத்தில் ஒருவர் கைது..! வேலை கிடைக்காத விரக்தியாம்..

ஆசிரியர் - Editor I
நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜனின் மக்கள் தொடர்பு அலுவலக பதாகைக்கு தீ வைத்த சந்தேகத்தில் ஒருவர் கைது..! வேலை கிடைக்காத விரக்தியாம்..

யாழ்.சண்டிலிப்பாய் பகுதியில் உள்ள நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதனின் மக்கள் தொடர்பு அலுவலக பதாகைக்கு தீ வைத்த குற்றச்சாட்டில் ஒருவர் கைது செய்யப்பட்டிருக்கின்றார். 

சுழிபுரத்தைச் சேர்ந்த 33 வயதுடைய நபர் ஒருவரே மானிப்பாய் பொலிஸாரினால் நேற்று கைது செய்யப்பட்டிரக்கின்றார். 

பதாகைக்கு தீ வைக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்த மானிப்பாய் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஜெயந்த குணதிலக, சுழிபுரத்தைச் சேர்ந்த ஒருவரை இன்று கைது செய்தார்.

சந்தேக நபர் வேலைவாய்ப்புப் பெற்றுத்தரவில்லை என்ற விரக்தியில் அலுவலகப் பதாகைக்கு தீவைத்துள்ளார் என்று விசாரணையில் தெரியவந்தது என்று பொலிஸார் தெரிவித்தனர்.

யாழ்ப்பாணத்தில் அமைதியைச் சீர்குலைக்கும் வகையில் இந்தச் செயல் அமைந்ததால் சந்தேக நபர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் தெரிவித்துள்ளார்.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு