முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரத்தில் விசேட அதிரடிப்படையினரும் உப்பில்லா கஞ்சி குடித்தனர்..!

ஆசிரியர் - Editor I
முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரத்தில் விசேட அதிரடிப்படையினரும் உப்பில்லா கஞ்சி குடித்தனர்..!

நல்லூர் தியாக தீபம் திலீபனின் நினைவிடத்தில் இடம்பெற்ற மே-18 இன அழிப்பு நாள் நினைவேந்தல் வார தொடக்கத்தில் கஞ்சி வழங்கும் நிகழ்வில் அவ் வீதியால் வந்த விசேட அதிரடிப் படையினருக்கு காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் உறவினர்கள் நேற்று வியாழக்கிழமை கஞ்சி வழங்கினர்.

மே 18 முள்ளிவாய்க்கால் இன அழிப்பு நாள் நினைவேந்தல் வாரம் நேற்றைய தினம் 12ஆம் திகதி வியாழக்கிழமை தொடக்கம் உப்பில்லாக் கஞ்சி வழங்கும் நிகழ்வு ஆரம்பிக்கப்பட்டது. இவ்வாறு நல்லூர் ஆலய வீதியில் காஞ்சி வழங்கிய உறவினர்கள் விசேட அதிரடிப் படையினருக்கு கூறும்போது 

நாங்களும் அம்மாமார் தான் பயப்படாமல் கஞ்சியை குடியுங்கள் என கூறி வழங்கினர்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு