யாழ்.போதனா வைத்தியசாலையில் தொடர் தொலைபேசி திருட்டு..! 9 தொலைபேசிகளுடன் சிக்கிய நபர்..

ஆசிரியர் - Editor I
யாழ்.போதனா வைத்தியசாலையில் தொடர் தொலைபேசி திருட்டு..! 9 தொலைபேசிகளுடன் சிக்கிய நபர்..

யாழ்.போதனா வைத்தியசாலையில் தொலைபேசி திருடுவதை தொழிலாகவே செய்துவந்த 24 வயதான நபர் ஒருவர் வசமாக மாட்டியுள்ளார்.

சந்தேக நபரிடமிருந்து  9 தொலைபேசிகள் கைப்பற்றப்பட்டுள்ளன என்று பொலிஸார் தெரிவித்தனர்.

மானிப்பாய் சாவற்கட்டுப் பகுதியைச் சேர்ந்த 24 வயதுடைய ஒருவரே இவ்வாறு நேற்று கைது செய்யப்பட்டுள்ளார்.

யாழ்.போதனா வைத்தியசாலையில் நீண்ட நாள்களாக ஊழியர்கள், நோயாளிகளின் தொலைபேசிகள் திருட்டுப்போயிருந்தன.

கதைத்துவிட்டுத் தருவதாக தெரிவித்துவிட்டு அபகரித்துச் செல்வது, சார்ஜ் போடும் போது மற்றும்

நோயாளிகள் மலசல கூடங்களுக்கு செல்லும் போது என அலைபேசிகள் திருடப்பட்ட சம்பவம் இடம்பெற்றன.

அவை தொடர்பில் பொலிஸில் முறைப்பாடுகள் செய்யப்பட்டன.

யாழ். தலைமையக பொலிஸ் நிலைய குற்றத் தடுப்பு பொலிஸ் பிரிவினர் மேற்கொண்ட விசாரணையிலேயே ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு