யாழ்.வெற்றிலைக்கேணியில் கொன்று புதைக்கப்பட்ட நபரின் சடலம் இன்று மீட்கப்பட்டுள்ளது..!

ஆசிரியர் - Editor I
யாழ்.வெற்றிலைக்கேணியில் கொன்று புதைக்கப்பட்ட நபரின் சடலம் இன்று மீட்கப்பட்டுள்ளது..!

யாழ்.வடமராட்சி கிழக்கு வெற்றிலைக்கேணி பகுதியில் கொல்லப்பட்டு பின்னர் புதைக்கப்பட்ட நபருடைய சடலம் இன்று மீட்கப்பட்டிருக்கின்றது. 

வெற்றிலைக்கேணி - முள்ளியான் என்ற முகவரியைச் சேர்ந்த தாசன் சிவஞானம் (வயது 42) என்ற நபர் கொலை செய்யப்பட்டு புதைக்கப்பட்ட நிலையில் அது குறித்த தகவல் நேற்று வெளியாகியிருந்தது.

சம்பவம் தொடர்பில் விசாரணை மேற்கொண்ட மருதங்கேணி பொலிஸார் முதற்கட்ட விசாரணையில் கொலை செய்யப்பட்டவரின் மனைவியும் பிறிதொரு நபரும் இணைந்து கொலை செய்து புதைத்தமையினை கண்டறிந்துள்ளனர். 

நீதிமன்ற அனுமதியின் பின்னர் சடலத்தை மீட்கும் பணியினை முன்னெடுத்திருந்தனர். இதன்போது கைகள் கட்டப்பட்ட நிலையில் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு