யாழ்.பருத்தித்துறை - புலோலியில் கீரிக் கடிக்கு இலக்கான வயோதிப பெண் மரணம்..! ஆய்வுகளுக்காக மூளை மருத்துவ ஆராய்ச்சி நிறுவனத்திற்கு அனுப்பபட்டது..

ஆசிரியர் - Editor I
யாழ்.பருத்தித்துறை - புலோலியில் கீரிக் கடிக்கு இலக்கான வயோதிப பெண் மரணம்..! ஆய்வுகளுக்காக மூளை மருத்துவ ஆராய்ச்சி நிறுவனத்திற்கு அனுப்பபட்டது..

கீரி கடிக்குள்ளான வயோதிப பெண் ஒருவர் 3 மாதங்களின் பின் உயிரிழந்த நிலையில் நீர்வெறுப்பு நோயினாலேயே அவர் உயிரிழந்துள்ளதாக மருத்துவ அறிக்கையிட்டுள்ள நிலையில், மேலதிக மருத்துவ பரிசோதனைகளுக்காக அவருடைய மூளை மருத்துவ ஆராய்ச்சி நிறுவனத்திற்கு அனுப்பபட்டுள்ளது. 

பருத்தித்துறை - புலோலி ஆலடியைச் சேர்ந்த பாலசுந்தரம் மங்கையக்கரசி (வயது-69) என்ற வயோதிபப் பெண்ணே சம்பவத்தில் உயிரிழந்துள்ளார். கடந்த பெப்ரவரி மாதம் இவருக்கு கீரி கடித்துள்ளது. அவர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்றுள்ளார். எனினும் அவருக்கு விலங்கு விசர் தடுப்பூசி மருந்து வழங்கப்படவில்லை.

இந்த நிலையில் 3 மாதங்களின் பின் அவர் நேற்றுமுன்தினம் உயிரிழந்துள்ளார். அவரது உயிரிழப்புக்கு நீர்வெறுப்பு நோயே காரணம் என்று மருத்துவ அறிக்கையிடப்பட்டுள்ளது. மந்திகை ஆதார மருத்துவமனையில் சட்ட வைத்திய அதிகாரி கனகசபாபதி வாசுதேவா முன்னிலையில் வயோதிபப் பெண்ணின் சடலம் 

உடற்கூற்றுப் பரிசோதனைக்கு உள்படுத்தப்பட்டது. அவருக்கு நீர்வெறுப்பு நோய் ஏற்பட்டுள்ளதா என்பதனை உறுதி செய்ய மூளையை கொழும்பு மருத்துவ ஆராய்ச்சி நிறுவனத்துக்கு அனுப்ப சட்டவைத்திய அதிகாரி பணித்தார்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு