கட்டுப்பாட்டை இழந்த தண்ணி பவுசர் மின்கம்பத்துடன் மோதி விபத்து! யாழ்.தெல்லிப்பழையில் சம்பவம்..

ஆசிரியர் - Editor I
கட்டுப்பாட்டை இழந்த தண்ணி பவுசர் மின்கம்பத்துடன் மோதி விபத்து! யாழ்.தெல்லிப்பழையில் சம்பவம்..

யாழ்.தெல்லிப்பழை பகுதியில் தண்ணீர் பவுசர் கட்டுப்பாட்டை இழந்து மின் கம்பத்துடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. 

குறித்த சம்பவம் இன்று காலை இடம்பெற்றுள்ளது. தெல்லிப்பளை - பண்டத்தரிப்பு வீதி வழியாக பொன்னாலையில் உள்ள ஐஸ் தொழிற்சாலைக்கு 

தண்ணீர் விநியோகம் செய்துவிட்டு திரும்பியவேளையில் இந்த விபத்து இடம்பெற்றது. எனினும் தெய்வாதீனமாக வாகனத்தின் சாரதி சிறு காயங்களுடன் தப்பினார்.

இளவாலை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு