தமிழ்தேசிய மக்கள் முன்னணி சைக்கிள் சின்னத்தில் தனித்து போட்டி!

ஆசிரியர் - Admin
தமிழ்தேசிய மக்கள் முன்னணி சைக்கிள் சின்னத்தில் தனித்து போட்டி!

தமிழ்தேசிய மக்கள் முன்னணியானது எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் 8 மாவட்டங்களிலும் சைக்கிள் சின்னத்தில் தனித்து போட்டியிடும் என அதன் பேச்சாளர் வி.மணிவண்ணன் தெரிவித்தார்.

எதிர்வரும் உள்ளுராட்சித் தேர்தலில் சுரேஸ் பிறேமச்சந்திரனுடன் கூட்டிணைந்து போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்ட நிலையில் தற்போது சுரேஸ் பிறேமச்சந்திரன் கூட்டணியுடன் இணைந்து போட்டியிடவுள்ளதாக தெரிவிக்கப்படும் நிலையில் முன்னணியின் நிலைப்பாடு தொடர்பில் கேட்டபோதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்
இடம்பெறவுள்ள உள்ளுராட்சி மன்றத் தேர்தலில் தமிழர் தாயகப் பிரதேசத்தில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியானது 8 மாவட்டங்களிலும் சைக்கிள் சின்னத்தில் தனித்து போட்டியிடும். இதேநேரம் த.தே.ம. முன்னணியுடன் பொது அமைப்புக்களின் பிரதிநிதிகளையும் இணைந்து ஒன்றாக போட்டியிடத் தீர்மானித்துள்ளோம்.

இதேநேரம் பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள் மட்டுமன்றி இணைந்து போட்டியிடுவதற்கு ஈ.பீ.ஆர்.எல்.எவ் கட்சியும் முன்வந்தால் அவர்களையும் இணைந்து போட்டியிடவும் தயாராகவே உள்ளோம் என்றார்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு