யாழ்.மண்கும்பான் - சாட்டி கடலில் மூழ்கி அரியாலையை சேர்ந்த குடும்பஸ்த்தர் மரணம்..!

ஆசிரியர் - Editor I
யாழ்.மண்கும்பான் - சாட்டி கடலில் மூழ்கி அரியாலையை சேர்ந்த குடும்பஸ்த்தர் மரணம்..!

யாழ்.மண்கும்பான் சாட்டி கடலில் நீராடச் சென்ற அரியாலை பகுதியை சேர்ந்த நபர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.

குறித்த சம்பவம் இன்று மதியம் இடம்பெற்றுள்ளது. சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, அரியாலையை சேர்ந்த நபர் கடலில் குளிக்க சென்றிருந்த நிலையில் சுழியில் அகப்பட்டு நீரில் மூழ்கியதாக கூறப்படுகின்றது.

பின்னர் குறித்த நபருடைய சடலம் மீட்கப்பட்டு பிரேத பரிசோதனைக்காக யாழ்.போதனா வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

சம்பவத்தில் உயிரிழந்தவர் அரியாலையை சேர்ந்த இ.கணேசராசா (வயது46) என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு