யாழ்.கல்வியங்காட்டில் டிப்பர் சாரதியிடம் 10 ஆயிரம் ரூபாய் லஞ்சம் வாங்கிய 3 பொலிஸ் உத்தியோகஸ்த்தர்களுக்கு தண்டணை இடமாற்றம்...!

ஆசிரியர் - Editor I
யாழ்.கல்வியங்காட்டில் டிப்பர் சாரதியிடம் 10 ஆயிரம் ரூபாய் லஞ்சம் வாங்கிய 3 பொலிஸ் உத்தியோகஸ்த்தர்களுக்கு தண்டணை இடமாற்றம்...!

10000 ஆயிரம் ரூபாய் லஞ்சம் வாங்கிய குற்றச்சாட்டில் யாழ்.கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றிய 3 பொலிஸ் உத்தியோகஸ்த்தர்களுக்கு இடமாற்றம் வழங்கப்பட்டிருக்கின்றது. 

கல்வியங்காடு பகுதியில் டிப்பர் ஒன்றினை மறித்து 10000 ரூபா பணம் பெற்றமை தொடர்பில் பாதிக்கப்பட்ட நபர் யாழ்.மாவட்ட பிரதி பொலிஸ்மா அதிபர் பிரியந்த லியனகே விடம் நேரடியாக முறைப்பாடு செய்துள்ளார்.

பாதிக்கப்பட்ட நபரையும் இலஞ்சம் பெற்ற மூன்று பொலிஸாரையும் விசாரணைக்கு அழைத்த பிரதி பொலிஸ்மா அதிபர் பெற்றுக்கொண்ட பத்தாயிரம் பணத்தினை திருப்பி வழங்குமாறு உத்தரவிட்டுள்ளதுடன் 

பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு உடனடி இடமாற்றம் வழங்கியுள்ளார். அண்மைக்காலமாக பல்வேறு பொலிஸ் பிரதேசங்களில் இலஞ்சம் பெறும் பொலிஸ் உத்தியோகத்தர்கள் தொடர்பாக 

பிரதி பொலிஸ் மா அதிபர் கூடிய கவனம் செலுத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு