யாழ்.மீசாலையில் கோவில் பூசகரின் பண பையை பறித்துச் சென்ற வழிப்பறி கும்பல்...!

ஆசிரியர் - Editor I
யாழ்.மீசாலையில் கோவில் பூசகரின் பண பையை பறித்துச் சென்ற வழிப்பறி கும்பல்...!

யாழ்.தென்மராட்சி - மீசாலை தட்டான்குளம் பிள்ளையார் ஆலயத்தின் பூசகருடைய பண பையை பறித்துக் கொண்டு இளைஞர்கள் இருவர் தப்பி ஓடியுள்ளனர்.

குறித்த பூசகர் பிள்ளையார் கோவிலில் பூசை வழிபாட்டை முடித்துவிட்டு மற்றொரு கோவிலில் பூசைக்கு சென்றபோதே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

பறித்துச் செல்லப்பட்ட பூசகரின் பையில் அன்றைய பூசை காசு மற்றும் மாத சம்பளம் 25 ஆயிரம் ரூபாய் சம்பளம் ஆகியன இருந்த நிலையில் மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் பண பையை பறித்து கொண்டு தப்பி ஓடியுள்ளனர்.

சம்பவம் தொடர்பாக பூசகர் சாவகச்சேரி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்துள்ளார்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு