ஹர்த்தாலால் சோபையிழந்த யாழ்.மாவட்டம்..! வடகிழக்கின் மற்றய பெருநகரங்களிலும் அதேநிலை..

ஆசிரியர் - Editor I
ஹர்த்தாலால் சோபையிழந்த யாழ்.மாவட்டம்..! வடகிழக்கின் மற்றய பெருநகரங்களிலும் அதேநிலை..

அரசாங்கம் வீடு செல்லவேண்டும். எனக்கோரி இன்றைய தினம் நாடு தழுவிய ஹர்த்தால் அனுட்டிக்கப்படும் நிலையில், வடகிழக்கிலும் முக்கிய நகரங்கள் சோபையிழந்து காணப்பட்டதை அவதானிக்க முடிந்தது. 

குறிப்பாக யாழ்.நகரில் வர்த்தக நிலையங்கள் பூட்டப்பட்டிருந்தது, இ.போ.ச பேருந்து சேவைகள் இடம்பெற்றபோதும் தனியார் சேவைகள் இயங்காதிருந்தது. நகர வீதிகள் வெறிச்சோடி காணப்பட்டதையும், 

வங்கிகள் பூட்டப்பட்டிருந்ததையும் அவதானிக்க முடிந்தது. இதேபோல் வடக்கிழக்கு மாகாணங்களின் முக்கிய பெருநகரங்கள் சோபையிழந்து காணப்பட்டிருக்கின்றது. எனினும் எங்கும் அசம்பாவிதங்கள் ஏற்படவில்லை. 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு