வடமாகாணத்தில் சாத்தியமான புதிய தொழில் முயற்சிகள் தொடர்பில் ஆந்திரா மற்றும் தெலுங்கானா தொழிலதிபர்களுடன் வடமாகாண ஆளுநர் பேச்சு..

ஆசிரியர் - Editor I
வடமாகாணத்தில் சாத்தியமான புதிய தொழில் முயற்சிகள் தொடர்பில் ஆந்திரா மற்றும் தெலுங்கானா தொழிலதிபர்களுடன் வடமாகாண ஆளுநர் பேச்சு..

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள வடமாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜா, ஆந்திரா மற்றும் தெலுக்கானா தொழிநுட்ப வல்லுனர்களை தமிழகத்தில் சந்தித்து கலந்துரையாடல் நடத்தியிருக்கின்றார். 

இதன்போது வடக்கு அபிவிருத்தியை முன்னோக்கி நகர்த்திச் செல்வதற்கு தேவையான ஒத்துழைப்பு வழங்குவது தொடர்பிலும் அனுபவங்களை பகிர்வது தொடர்பில் தொழில்நுட்ப வல்லுனர்களுடன் ஆளுநர் கலந்துரையாடினார்.

வடக்கில் இறால் வளர்ப்பு, மீன்பிடி பண்ணைப் பொருளாதாரம், ரயில்வே, மீள் புதுப்பிக்க சக்தித்திட்டம் மற்றும் நிதி பெறும் முறைமை தொடர்பில் விரிவாக கலந்துரையாடப்பட்டது.

குறித்த கலந்துரையாடலில் வடமாகாணத்தில் முட்டை உற்பத்தியை அதிகரித்தல் மற்றும் கோழிப் பண்ணையாளர்கள் ஊக்குவித்தல் தொடர்பில் ஆளுநர் தனது கருத்துக்களை முன்வைத்ததுடன் 

போக்குவரத்துத் துறைகளான கப்பல் சேவை மற்றும் விமானப் போக்குவரத்து தொடர்பில் தனது கருத்துக்களை முன்வைத்திருந்தார்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு