யாழ்.வல்லை மதுபானசாலையில் இளைஞன் குத்திக் கெல்லப்பட்ட சம்பவம்..! இரு சந்தேகநபர்கள் சரண், பிரதான சந்தேகநபர் தொடர்ந்தும் தலைமறைவு..

ஆசிரியர் - Editor I
யாழ்.வல்லை மதுபானசாலையில் இளைஞன் குத்திக் கெல்லப்பட்ட சம்பவம்..! இரு சந்தேகநபர்கள் சரண், பிரதான சந்தேகநபர் தொடர்ந்தும் தலைமறைவு..

யாழ்.வல்லை பகுதியில் உள்ள மதுபானசாலையில் கடந்த 3ம் திகதி இரவு இடம்பெற்ற கோஷ்டி மோதலில் 25 வயதான இளைஞன் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் தேடப்பட்டுவந்த இரு சந்தேகநபர்கள் நெல்லியடி பொலிஸ் நிலையத்தில் சரணடைந்துள்ளனர். 

குணசேகரம் குணசோதி (வயது 25) எனும் இளைஞனின் கொலை தொடர்பில் நெல்லியடி பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்த நிலையில் சம்பவத்துடன் தொடர்புடைய 4 சந்தேகநபர்களை பொலிஸார் அடையாளம் கண்டிருந்தனர். அவர்களை கைது செய்தவற்கு நடவடிக்கை எடுத்திருந்த நிலையில் 

அல்வாய் பகுதியை சேர்ந்த இருவர் பொலிஸ் நிலையத்தில் சரணடைந்துள்ளனர். அதேவேளை சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேக நபர் உள்ளிட்ட இருவர் தொடர்ந்தும் தலைமறைவாகியுள்ளதாகவும் , அவர்களை கைது செய்வதற்கான நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளதாகவும் , 

சரணடைந்துள்ள இருவரும் அன்றைய தினம் பிரதான சந்தேகநபருடன் மது அருந்திய நபர்கள் எனவும் பொலிஸ் தகவல்கள் தெரிவிக்கின்றன.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு