திடீர் காய்ச்சலால் 11 மாத குழந்தை உயிரிழப்பு..! கொடிகாமம் - தவசிகுளத்தில் சம்பவம்..

ஆசிரியர் - Editor I
திடீர் காய்ச்சலால் 11 மாத குழந்தை உயிரிழப்பு..! கொடிகாமம் - தவசிகுளத்தில் சம்பவம்..

திடீர் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட நிலையில் யாழ்.போதனா வைத்தியாலைக்கு கொண்டுவரப்பட்ட 11 மாத குழந்தை உயிரிழந்துள்ளது. 

யாழ்.கொடிகாமம் - தவசிகுளத்தை சேர்ந்த சாந்தகுமார் விஸ்வந் என்ற 11 மாத ஆண் குழுந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளது. 

நேற்றய தினம் காலை குழந்தைக்கு காய்ச்சல் ஏற்பட்டிருந்த நிலையில் பனடோல் கொடுக்கப்பட்டது. ஆனாலும் காய்ச்சல் நிற்காமையால், 

மாலை 2 மணியளவில் மிருசுவில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட குழுந்தை மேலதிக சிகிச்சைகளுக்காக யாழ்.போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டது. 

எனினும் குழந்தை ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் அறிக்கையிட்டுள்ளனர். 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு