யாழ்.காரைநகரில் கள்ளுத் தவறணையில் நடந்த கோஷ்டி மோதல்..! கத்திக்குத்துக்கு இலக்கான 28 வயது இளைஞன் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதி..

ஆசிரியர் - Editor I
யாழ்.காரைநகரில் கள்ளுத் தவறணையில் நடந்த கோஷ்டி மோதல்..! கத்திக்குத்துக்கு இலக்கான 28 வயது இளைஞன் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதி..

யாழ்.காரைநகர் - கசூரினா கடற்கரையை அண்மித்த பகுதியில் உள்ள தவறணை ஒன்றில் இரு குழுக்களுக்கிடையில் இடம்பெற்ற மோதலில் கத்திக் குத்துக்கு இலக்கான ஒருவர் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 

யாழ்.சுழிபுரம் பகுதியை சேர்ந்த 28 வயதான இளைஞர் ஒருவரே படுகாயமடைந்த நிலையில் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருக்கின்றார். சம்பவம் தொடர்பாக மேலும் தொியவருவதாவது, 

நேற்று மாலை 7 மணியளவில் யாழ்ப்பாணம் காரைநகர் கசூரினா கடற்கரை தவறணை பகுதியில் இளைஞர்களுக்கு இடையில் ஏற்பட்ட முரண்பாட்டில் சுழிபுரம் பகுதியைச் சேர்ந்த 28 வயதான இளைஞர் ஒருவர் மீது கத்தி வெட்டு இடம்பெற்றுள்ளது. 

இதனையடுத்து குறித்த இளைஞன் வலந்தலை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் மேலதிக சிகிச்சைகளுக்காக யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு 

சிகிச்சை பெற்றுவருவதாக தெரிவிக்கப்படுகிறது. இதனையடுத்து சம்பவம் தொடர்பில்  ஊர்காவற்துறை பொலிஸ் நிலையத்துக்கு அறிவிக்கப்பட்ட நிலையில் சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு