வீதியில் விழுந்து கிடந்த 8 வயது சிறுவன் உயிரிழப்பு..! யாழ்.பருத்தித்துறை - துன்னாலை குடவத்தையில் சம்பவம்...

ஆசிரியர் - Editor I
வீதியில் விழுந்து கிடந்த 8 வயது சிறுவன் உயிரிழப்பு..! யாழ்.பருத்தித்துறை - துன்னாலை குடவத்தையில் சம்பவம்...

யாழ்.பருத்துறை துன்னாலை - குடவத்தை பகுதியில் உள்ள கோவில் ஒன்றின் அருகில் வீதியில் விழுந்து கிடந்த 8 வயது சிறுவன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிறுவன் ஏற்கனவே உயிரிழந்துள்ளதாக கூறப்பட்டுள்ளது. 

குறித்த சம்பவம் நேற்று இடம்பெற்றுள்ளது. மஹிந்தன் நிரோஜன் என்ற 8வயது சிறுவன் விட்டிலிருந்து வெளியே சென்றிருந்த நிலையில் அப்பகுதியில் உள்ள கோவில் அருகிலுள்ள வீதியில் விழுந்து கிடந்துள்ளான். இதனை அவதானித்த சிலர் சிறுவனை மீட்டு 

பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர். எனினும் சிறுவன் ஏற்கனவே உயிரிழந்துள்ளதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர். இந்நிலையில் மரண விசாரணை மற்றும் பிரேத பரிசோதனைக்காக சடலம் வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது. 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு