மதுபோதையில் உருவான வாய்த்தர்க்கம் மோதலாக மாறியதில் 25 வயது இளைஞன் குத்தி கொலை..! யாழ்.வல்லை பகுதியில் உள்ள விடுதி ஒன்றில் குரூர சம்பவம்...

ஆசிரியர் - Editor I
மதுபோதையில் உருவான வாய்த்தர்க்கம் மோதலாக மாறியதில் 25 வயது இளைஞன் குத்தி கொலை..! யாழ்.வல்லை பகுதியில் உள்ள விடுதி ஒன்றில் குரூர சம்பவம்...

யாழ்.நெல்லியடியை அண்மித்த வல்லை பகுதியில் உள்ள விருந்தினர் விடுதி ஒன்றில் மதுபோதையில் இடம்பெற்ற கோஷ்டி மோதலில் 25 வயதான இளைஞன் உயிரிழந்துள்ளார். 

மது விருந்தில் ஒருவான வாய்த்தர்க்கம் மோதலில் முடிந்த நிலையில் சாரய போத்தல்களை உடைத்து தாக்கியுள்ளனர். குறித்த சம்பவத்தில் திக்கம் - நாச்சிமார் கோவிலடியை சேர்ந்த 

ஞானசேகரம் குணசோதி (வயது 25) என்ற இளைஞன் உயிரிழந்துள்ளான். படுகாயமடைந்த நிலையில் மந்திகை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் இளைஞன் உயிரிழந்துள்ளார். 

சம்பவத்தில் மேலும் சிலர் காயமடைந்துள்ளதாகவும் கூறப்படுகின்றது. மேலும் சம்பவம் இடம்பெற்ற விடுதி பொலிஸாரின் கட்டுப்பாட்டுக்குள் எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது. 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு