யாழ்.வடமராட்சி கடலில் கடற்படை படகு மோதியதில் மீனவர் படகு சேதம்..! கடலில் தத்தளித்த இரு மீனவர்கள் மீட்பு..

ஆசிரியர் - Editor I
யாழ்.வடமராட்சி கடலில் கடற்படை படகு மோதியதில் மீனவர் படகு சேதம்..! கடலில் தத்தளித்த இரு மீனவர்கள் மீட்பு..

யாழ்.வடமராட்சி கடற்பரப்பில் மீனவரின் படகு மீது கடற்படை மோதி விபத்துக்குள்ளானதில் கடலில் தத்தளித்த இரு மீனவர்களும் காப்பாற்றப்பட்டுள்ள நிலையில், படகு மோசமாக சேதமடைந்துள்ளது. 

பருத்தித்துறை சுப்பர்மடம் கடற்தொழிலாளர் சங்கத்தின் தலைவர் தேவராசா தேவகுமார் என்பவரது படகே சேதமடைந்துள்ளது.

படகு சேதடைந்ததால் நடுக்கடலில் தத்தளித்த கடற்தொழிலாளிகள் இருவரையும் சில நிமிடங்கள் கழித்து கடற்படையினர் படகுடன் இழுத்து வந்து கரை சேர்த்துள்ளனர்.

தமது படகு மீது கடற்படையின் அதிவேகப் படகு ஏறிச் சென்றது என்று கடற்தொழிலாளர் சங்கத் தலைவர் தெரிவித்தார்.

சம்பவத்தில் கடற்படையின் படகு மோதியதனால் தனது படகு மீளப் பயன்படுத்த முடியாதவாறு சேதமடைந்துள்ளதாகவும் 10 இலட்சம் ரூபா இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும் 

கடற்தொழிலாளர் பருத்தித்துறை பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு