மாடு குறுக்கே நின்றதால் நிறுத்தப்பட்ட வாகனம் மீது மோட்டார் சைக்கிள் மோதி விபத்து! முதியவர் படுகாயம், யாழ்.அராலி பாலத்தடியில் சம்பவம்..

ஆசிரியர் - Editor I
மாடு குறுக்கே நின்றதால் நிறுத்தப்பட்ட வாகனம் மீது மோட்டார் சைக்கிள் மோதி விபத்து! முதியவர் படுகாயம், யாழ்.அராலி பாலத்தடியில் சம்பவம்..

யாழ்.அராலி பாலத்தடியில் நேற்றிரவு இடம்பெற்ற விபத்தில் முதியவர் ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.

பட்டா ரக வாகனம் ஒன்று காரைநகரில் இருந்து யாழ்.நகரம் நோக்கி  பயணித்துக்கொண்டிருந்தபோது குறித்த வாகனத்திற்கு பின்னால் முதியவர் ஒருவர் மோட்டார் சைக்கிளில் பின் தொடர்ந்தது வந்துள்ளார்.

இதன்போது வீதிக்கு குறுக்கே மாடு சென்றதால் பட்டா வாகனம் திடீரென நிறுத்தப்பட்டது. இதனால் கட்டுப்பாட்டை இழந்த பின்னால் மோட்டார் சைக்கிள் வாகனத்தில் மோதி விபத்திற்குள்ளானது. 

சம்பவத்தில் மோட்டார் சைக்கிளை ஓட்டிவந்த முதியவர் படுகாயமடைந்த நிலையில் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருக்கின்றார். 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு