தமிழர்கள் ஒதுங்கியிருப்பதே சிறப்பு..! எவர் வந்தும் எதையும் வெட்டி விழுத்தபோவதில்லை, எம்.கே.சிவாஜிலிங்கம்..

ஆசிரியர் - Editor I
தமிழர்கள் ஒதுங்கியிருப்பதே சிறப்பு..! எவர் வந்தும் எதையும் வெட்டி விழுத்தபோவதில்லை, எம்.கே.சிவாஜிலிங்கம்..

இலங்கையில் அரசுக்கு எதிராக இடம்பெறும் போராட்டத்திலிருந்து தமிழ் மக்கள் ஒதுங்கியிருப்பதே நல்லது. அதே சமயம் ஆட்சியாளர்களிடமிருந்து எதுவும் தமிழ் மக்களுக்கு கிடைக்கும் என்று எதிரபார்ப்பது முட்டாள்தனம். 

மேற்கண்டவாறு முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் தமிழ் தேசிய கட்சியின் செயலாளருமான எம் கே.சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், 

இலங்கை ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்சவுக்கு எதிராகவும், பிரதமர் மஹிந்த ராஜபக்சவுக்கும் அரசாங்கத்திற்கும் எதிராகவும் தொடர்ச்சியாக மூன்றாவது வாரமாக மாபெரும் போராட்டங்கள் தெற்கிலே வெடித்திருக்கிறது. 

பல்லாயிரக்கணக்கானவர்கள் கொழும்பு பிரதான வீதிகளிலே அதேபோல கண்டியிலிருந்து பேரணிகள், பல்வேறு மாவட்டங்களிலே நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. 

இன் நிலமையிலே ஆர்ப்பாட்டங்கள் காலிமுகத்திடலில் இடம்பெறுகின்ற நிலைமையிலே அடிக்கடி முழு நாட்டுக்கும் ஆனா ஒரு பொது வேலை நிறுத்த அழைப்பில் நாங்கள் இணைந்து கொள்வதா இல்லையா என்ற ஒரு கேள்வி எழுகிறது? 

இதிலே எங்களுடைய பிரதானமான எந்த கோரிக்கைகளும் இல்லாமல் இதில் ஆகக்குறைந்தது பங்கரவாத தடை சட்டத்தை நீக்க வேண்டும் என்ற கோரிக்கை கூட இடம்பெறவில்லை. 

இது போன்ற கோரிக்கைகள் எதுவும் இல்லாமல் நாங்கள் இவர்களுடன் சேர்ந்து இழுபட்டு கொண்டு போவதில் எந்த பிரயோசனமும் இல்லை. நீங்கள் ஏதோ கடையை பூட்டிவிட்டு இன்னும் பூட்டிய கதவுக்கு பின்னால் மோசடிகளை ஒரு சிலர் செய்கின்றனர். 

ஏல்லோரையும் நாங்கள் சொல்லவில்லை. இதை நீங்கள் செய்யாமல் வெறுமனே கடையடைப்பு செய்து நாங்கள் இந்த பிரச்சினைகளில் இழுபட்டுக்கொண்டு போவதில் அர்த்தமில்லை. 

ஆகவே போர்காலத்தில் மிக மோசமாக பாதிக்கப்பட்ட எங்களுடைய பொருளாதாரம் இப்பொழுதும் அண்மைக் காலங்களிலும் பல தடவைகள் நாங்கள் கூட பொது முழு கடையடைப்பை கோருவதிலே தவிர்த்துக் கொண்டோம். 

மக்கள் நொந்து போயிருக்கிறார். ஆகவே இந்த சூழ்நிலையிலே எங்களுடைய இறுக்கமான சில கோரிக்கைகளை வலியுறுத்தி இவ்வாறன விடயங்களை செய்வதை விடுத்து முழு நாட்டிற்க்குமான முழு ராஜபக்ச குடும்பம் சென்றவுடன் 

விலைவாசிகள் எல்லாம் கீழே வந்துவிடுமா இல்லை இவர் போய் அவர் வந்தவுடன் அவர்கள் ஏதோ வெட்டி விழுத்த போகிறார்களா? ஏன் மகாநாயக்க தேரர்கள் இப்பொழுது சொல்கிறார்கள் தங்களுடைய மகா, சங்கத்தினுடைய சங்க பிரகடனத்தை தாங்கள் செய்வோம் என்று. 

ஆகவேதமிழ் மக்கள் லட்சக்கணக்கில் கொல்லப்பட்ட பொழுது தேடி வராதவர்கள் எங்களுக்கு அநீதி நடக்கின்ற பொழுது எதுவும் சொல்லாதவர்கள் இந்த விஷயங்களிலே எங்களுக்கு ஏதாவது கிடைக்கும் என்று நாங்கள் எதிர்பார்ப்பது ஒரு அர்த்தமற்றது

ஆனால் அதிலே சில விடயங்களை புகுத்தி பேரம் பேச வேண்டிய தேவைகள் இருக்கின்றன. ஆகவே அதை அவர்கள் அரசியல் தலமை தமிழ் தேசிய அணியை சேர்ந்த 13 பாராளுமன்ற உறுப்பினர்களை மக்கள் அனுப்பியிருக்கிறார்கள். 

ஆகவே அந்த பிழைகள் சரிகள் ஏல்லாவற்றையும் அவர்கள் பார்ப்பார்கள். அதை அவர்கள் பார்க்கட்டும் ஆகவே அதை விடுத்து வெறுமனே முழு அடைப்பின் மூலம் அவர்களுக்கு அங்கே ஒரு அழுத்தம் கொடுக்கப்பட்டு அவர்கள் விட்டுச் செல்லப் போவதுமில்லை. 

வருபவர்களும் ஏங்களுக்கு தூக்கி தர போறவர்களும் அல்ல. ஆகவே இந்த விடயத்தில் நொந்து போயிருக்க கூடிய நாட்கள் கூலிகள் சாதாரண மக்களுடைய எல்லாவற்றையும் சிந்தித்து நாங்கள் இதிலே ஒதுங்கியிருந்தால் தான்

ஏன் நீங்கள் ஒதுங்கி இருக்கிறீர்கள்? என்ற கேள்வியோடு அந்த தலைமை வருகின்ற பொழுது எங்களுடைய பேரங்களை பேசுவதற்கு இலகுவாக இருக்கும். ஆகவே இதை எல்லாம் நீங்கள் கலவைப்படாமல் 

மக்கள் நீங்கள் செயற்பட வேண்டும் ஏன்பதுதான் என்னுடைய தாழ்மையான பணிவான கருத்து என்றார்.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு