மோட்டார் சைக்கிளை இயங்கு நிலையில் நிறுத்திவிட்டு கோவில் கும்பிட சென்றவருக்கு நடந்த சம்பவம்..! யாழ்.கல்லுண்டாய் வைரவர் கோவிலில்..

ஆசிரியர் - Editor I
மோட்டார் சைக்கிளை இயங்கு நிலையில் நிறுத்திவிட்டு கோவில் கும்பிட சென்றவருக்கு நடந்த சம்பவம்..! யாழ்.கல்லுண்டாய் வைரவர் கோவிலில்..

யாப்பாணம் - வட்டுக்கோட்டை வீதியில் கல்லுண்டாய் வைரவர் கோவிலில் மோட்டார் சைக்கிளை நிறுத்திவிட்டு சாமி கும்பிட சென்றவருடைய மோட்டார் சைக்கிள் அவருடைய கண் முன்னால் திருடிச் செல்லப்பட்டுள்ளது. 

அராலி பகுதியை செர்ந்த ஒருவர் வேலை முடிந்து வீட்டிற்கு வரும் வழியில் மோட்டார் சைக்கிளை இயக்க நிலையில் வைத்துவிட்டு கல்லுண்டாய் வைரவர் கோவிலைத் தரிசித்து கொண்டிருந்தார்.

இதன்போது அப்பகுதியில் நின்ற ஒருவர் மோட்டார் சைக்கிளைத் திருடிச் சென்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.இச்சம்பவம் தொடர்பில் மானிப்பாய் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்ட நிலையில், 

மானிப்பாய் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். டிஸ்கவர் (Discover) NP - WN 3141 என்ற இலக்க மோட்டார் சைக்கிளே இவ்வாறு திருடப்பட்டுள்ளது. 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு