யாழ்.நகரில் வழிப்பறி கொள்ளையர்கள் துணிகரம்..! பொலிஸ் புலனாய்வாளர்கள் என கூறி பணம் மற்றும் எரிவாயு சிலின்டர் கொள்ளை..

ஆசிரியர் - Editor I
யாழ்.நகரில் வழிப்பறி கொள்ளையர்கள் துணிகரம்..! பொலிஸ் புலனாய்வாளர்கள் என கூறி பணம் மற்றும் எரிவாயு சிலின்டர் கொள்ளை..

யாழ்.மாநகரில் குடும்பஸ்த்தர் ஒருவரை வழிமறித்து தம்மை பொலிஸ் புலனாய்வாளர்கள் என அடையாளப்படுத்திய கும்பல் சமையல் எரிவாயு சிலின்டர் மற்றும் 25 ஆயிரம் ரூபாய் பணம் ஆகியவற்றை கொள்ளையடித்து சென்றுள்ளது. 

4 பேர் கொண்ட கொள்ளை கும்பலே இந்த வழிப்பறி கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டிருப்பதாக தொியவருகின்றது. இந்நிலையில் சம்பவம் தொடர்பான துரித விசாரணைகளை மேற்கொண்டிருந்த யாழ்.மாவட்ட பொலிஸ் புலனாய்வு பிரிவிர் சம்பவம் நடைபெற்று சில மணி நேரத்தில் ஒருவரை கைது செய்துள்ளனர். 

கைது செய்யப்பட்டவரிடமிருந்து சமையல் எரிவாயு சிலின்டர், மற்றும் 25 ஆயிரம் ரூபாய் பணம் ஆகியவற்றை பொலிஸார் மீட்டிருக்கின்றனர். கஸ்த்துாரியால் வீதியில் நேற்றய தினம் இரவு 9 மணியளவில் வீதியால் பயணித்த குடும்ப தலைவர் ஒருவரை 4 பேர் கொண்ட கும்பல் வழிமறித்துள்ளது. 

இதனையடுத்து குடும்ப தலைவர் நின்ற நிலையில் தங்களை பொலிஸ் புலனாய்வாளர்கள் என அடையாளப்படுத்திய குறித்த நபர்கள் குடம்ப தலைவரை மிரட்டி 25 ஆயிரம் ரூபாய் பணம் மற்றும் சமையல் எரிவாயு சிலின்டர் ஆகியவற்றை பறித்துக் கொண்டு தப்பி சென்றுள்ளனர். 

பாதிக்கப்பட்டவர் சம்பவம் தொடர்பில் யாழ்.பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்திருந்த நிலையில் துரிதமாக செயற்பட்ட பொலிஸ் புலனாய்வு பிரிவினர் கந்தர்மடம் பகுதியை சேர்ந்த 20 வயதான நபரை கைது செய்துள்ளதுடன், 

அவரிடமிருந்து 25 ஆயிரம் ரூபாய் பணம் மற்றும் சமையல் எரிவாயு சிலின்டர் ஆகியவற்றை மீட்டுள்ளதுடன், மிகுதி 4 பேரை தேடி வருகின்றனர். 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு