யாழ்.இளவாலையில் மதுபோதையில் வீதியால் சென்றவர்களுடன் உருவான வாய்த்தர்க்கம் கோஷ்டி மோதலாக மாறியது..!

ஆசிரியர் - Editor I
யாழ்.இளவாலையில் மதுபோதையில் வீதியால் சென்றவர்களுடன் உருவான வாய்த்தர்க்கம் கோஷ்டி மோதலாக மாறியது..!

யாழ்.இளவாலை - சென்யூட் பகுதியில் கடந்த 3 நாட்களுக்கு முன்னர் இடம்பெற்ற மோதல் சம்பவம் தொடர்பில் 3 சந்தேகநபர்களை பொலிஸார் கைது செய்துள்ளனர். 

மதுபோதையில் இருந்த இளைஞர்கள் சிலர் வீதியால் சென்ற இளைஞர்களுடன் தர்க்கம் புரிந்த நிலையில் இரு குழுக்களுக்கிடையிலான மோதலாக அது மாறியுள்ளது. 

இந்த மோதலில் 4 பேர் காணமடைந்த நிலையில் தெல்லிப்பழை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருக்கின்றனர். 

இந்நிலையில் சம்பவம் தொடர்பான விசாரணைகளை முன்னெடுத்த பொலிஸார் இளவாலை - மாரீசன்கூடல் பகுதியை சேர்ந்த 3 சந்தேகநபர்களை கைது செய்துள்ளனர். 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு