இடமாற்றம் இல்லாமல் யாழ்.மாவட்டத்தில் 4 கல்வி வலயங்களில் சுமார் 900 ஆசிரியர்கள்..! வடக்கு கல்வித்துறையில் அரசியல்...

ஆசிரியர் - Editor I
இடமாற்றம் இல்லாமல் யாழ்.மாவட்டத்தில் 4 கல்வி வலயங்களில் சுமார் 900 ஆசிரியர்கள்..! வடக்கு கல்வித்துறையில் அரசியல்...

யாழ்.மாவட்டத்திலுள்ள தீவகம் தவிர்ந்த 4 வலயங்களிலும் சுமார் 900 ஆசிரியர்கள் இதுவரை வெளிமாவட்டங்களுக்கு இடமாற்றம் செய்யப்படாமல் யாழ்.மாவட்டத்தில் தொடர்ந்தும் சேவை ஆற்றுவதாக அறியக்கிடைத்துள்ளது.

யாழ்.வலயம், வலிகாம வலயம், தென்மராட்சி மற்றும் வடமராட்சி வலயங்களிலேயே குறித்த ஆசிரியர்கள் தொடர்ச்சியாக வெளி மாவட்டங்கள் செல்லாமல் கடமையாற்றி வருகின்றனர். 

தற்போது ஆசிரியர் இடமாற்றத்திற்கு வெளிமாவட்டங்களில் கடமையாற்றும் குறிப்பாக கிளிநொச்சி, முல்லைத்தீவு, வவுனியா, மன்னார் ஆகிய மாவட்டங்களில் இருந்து யாழ்.மாவட்டத்திற்கு வருகை தருவதற்காக

சுமார் 274 பேர்வரை பணி இடமாற்றம் கோரி விண்ணப்பம் செய்திருப்பதாக அறிய முடிகிறது. எனினும் யாழ்.மாவட்டத்திலிருந்து 7 வருடங்களைத் தாண்டியவர்களுக்கு வெளிமாவட்ட இடமாற்றம் வழங்கப்படவுள்ள நிலையில் 

பலர் அரசியல்வாதிகளையும் உயர் அதிகாரிகளையும் நாடத் தொடங்கியுள்ளனர். வெளி மாவட்டங்களில் தொடர்ச்சியாக ஏழு வருடங்களுக்கு மேலாக ஆசிரியராக உள்ளவர்கள் தமது சொந்த இடங்களுக்கு தற்போது திரும்புவோம்.

என எதிர்பார்த்து காத்திருக்கும் நிலையில் அவர்களின் ஆசைகள் நிறைவேறுமா? என்பதில் பல சந்தேகங்கள் உள்ளதாக பாதிக்கப்பட்ட ஆசிரியர்கள் கூறுகின்றனர். ஏனெனில் யாழ்.மாவட்டத்திலுள்ள வலயங்களில் 

சில பாடங்களுக்கு மேலதிகமான ஆசிரியர்கள் இருக்கும் நிலையில் அவர்களை ஒத்த பாடத்திற்கு வருகைதரும் ஆசிரியர்களை கடமைக்கு அமர்த்துவதில் சிக்கல் நிலை தோன்றியுள்ளது. 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு