யாழ்.ஏழாலையில் அதிகாலையில் வீடு உடைத்து கொள்ளை..! குப்பிளானை சேர்ந்த இருவர் கைது..

ஆசிரியர் - Editor I
யாழ்.ஏழாலையில் அதிகாலையில் வீடு உடைத்து கொள்ளை..! குப்பிளானை சேர்ந்த இருவர் கைது..

யாழ்.ஏழாலை பகுதியில் கடந்த 16ம் திகதி அதிகாலை 3 மணியளவில் வீடொன்றை உடைத்து கொள்ளையடித்த குற்றச்சாட்டில் யாழ்.மாவட்ட குற்றத்தடுப்பு பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த கொள்ளை சம்பவம் தொடர்பில் சுன்னாகம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டிருந்த நிலையில் மாவட்ட குற்றத்தடுப்பு பொலிஸார் முன்னெடுத்திருந்த விசாரணைகளின் அடிப்படையில் குப்பிளான் பகுதியை சேர்ந்த 23 வயது மற்றும் 33 வயதான இருவர் கைது செய்யப்பட்டனர்.

கொள்ளையடிக்கப்பட்ட நகைகள் சுன்னாகத்தில் அடகு வைக்கப்பட்டிருந்த நிலையில் பொலிஸாரினால் அவை மீட்கப்பட்டுள்ளது. 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு