யாழ்.பல்கலைக்கழகத்திற்கு அருகில் விரிவுரையாளர் வீட்டில் கொள்ளையர்கள் கைவரிசை..!

ஆசிரியர் - Editor I
யாழ்.பல்கலைக்கழகத்திற்கு அருகில் விரிவுரையாளர் வீட்டில் கொள்ளையர்கள் கைவரிசை..!

யாழ்.பல்கலைக்கழகத்திற்கு அருகில் உள்ள வீடொன்றை உடைத்து சுமார் ஒரு கோடி ரூபாய் பெறுமதியான தங்க நகைகள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது.

குறித்த சம்பவம் தொடர்பாக கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. குறித்த திருட்டுச் சம்பவம் நேற்று முன்தினம் செவ்வாய்க்கிழமை இடம்பெற்றுள்ளது.

வீட்டிலிருந்தவர்கள் நேற்று முன்தினம் மாலை 5.30 மணியளவில் உறவினர் வீட்டுக்குச் சென்று இரவு 8.30 மணிக்கு வீடு திரும்பிய இடை 3 மணி நேரத்தில் கொள்ளை இடம்பெற்றுள்ளதாக கூறப்படுகிறது. 

சுமார் 50 பவுண் தங்க நகைகள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. வீட்டார் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்துள்ளனர்.

சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு