யாழ்.ஊரெழுவில் பொலிஸ் புலனாய்வு பிரிவினால் ஒருவர் கைது..! பெருமளவு பொருட்கள் மீட்பு..

ஆசிரியர் - Editor I
யாழ்.ஊரெழுவில் பொலிஸ் புலனாய்வு பிரிவினால் ஒருவர் கைது..! பெருமளவு பொருட்கள் மீட்பு..

யாழ்.ஊரெழு பகுதியில் போதை மாத்திரைகள் மற்றும் போதையூட்டக்கூடிய பொருட்களுடன் கோப்பாய் பொலிஸ் புலனாய்வுப் பிரிவினரால் இன்று ஒருவர் கைது செய்யப்பட்டார்.

இசம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,  ஊரெழு பகுதியில் போதை மாத்திரை வியாபாரம் இடம்பெறுவதாக பொலிஸ் புலனாய்வு பிரிவினருக்கு ஏற்கனவே தகவல் வழங்கப்பட்டது.

அதனடிப்படையில் பல நாட்களாக தேடுதல் நடவடிக்கைகளை மேற்கொண்ட கோப்பாய் பொலிஸ் புலனாய்வுப் பிரிவினர் போதை மாத்திரை வியாபாரம் செய்யும் சந்தேகநபரை கையும் களவுமாக பிடித்தனர்.

சம்பவத்தில் 500க்கும் மேற்பட்ட போதை மருந்துகள் மற்றும் பல பொருட்கள் கைப்பற்றப்பட்டது.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு