இன்றும், நாளையும் கனமழை தொடரும்! யாழ்ப்பாணம் மற்றும் மன்னார் தீவு பகுதிகளில் அதிக மழைவீழ்ச்சி, சிரேஸ்ட விரிவுரையாளர் நா.பிரதீபராஜா...

ஆசிரியர் - Editor I
இன்றும், நாளையும் கனமழை தொடரும்! யாழ்ப்பாணம் மற்றும் மன்னார் தீவு பகுதிகளில் அதிக மழைவீழ்ச்சி, சிரேஸ்ட விரிவுரையாளர் நா.பிரதீபராஜா...

மன்னார் வளைகுடா பகுதியில் நிலவும் காற்று சுழற்சியின் காரணமாக வடமாகாணத்தில் இன்றும், நாளையும் கனமழை தொடரும் என யாழ்.பல்கலைகழக சிரேஸ்ட விரிவுரையானர் நா.பிரதீபராஜா கூறியுள்ளார். 

மேலும் குறிப்பாக யாழ்ப்பாண மாவட்டம் மற்றும் மன்னார் தீவு உட்பட்ட மேற்கு கரையோரப் பகுதிகள் ஏனைய பகுதிகளை விட சற்று கூடுதலான அளவு மழையைப் பெறுவதற்கான வாய்ப்புக்கள் உள்ளன. 

விவசாய நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ள விவசாயிகள் இதனைக் கருத்தில் கொண்டு செயற்படுவது நன்மை பயக்கும். எனவும் அவர் கூறியுள்ளார். 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு