யாழ்.சத்திரத்து சந்தி விபத்தில் உயிரிழந்த சிறுவனின் மரணம் தொடர்பில் உரிய நீதி விசாரணையை நடத்து..! யாழ்.அராலியில் மக்கள் போராட்டம்...

ஆசிரியர் - Editor I
யாழ்.சத்திரத்து சந்தி விபத்தில் உயிரிழந்த சிறுவனின் மரணம் தொடர்பில் உரிய நீதி விசாரணையை நடத்து..! யாழ்.அராலியில் மக்கள் போராட்டம்...

யாழ்.நகரில் இடம்பெற்ற விபத்தில் சிறுவன் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக உரிய விசாரணை நடத்தகோரி யாழ்.அராலியில் இன்று புதன்கிழமை கவனயீர்ப்புப் போராட்டம் இடம்பெற்றது.

யாழ்.சத்திரத்துச் சந்தியில் இடம்பெற்ற கோர விபத்தில் உயிரிழந்த தாவடியைச் சேர்ந்த சிறுவன் அஜித்தன் அபிநயனின் மரணம் தொடர்பில் உரிய விசாரணையை மேற்கொள்ளுமாறு கோரியே அராலி மத்தி பகுதியில் குறித்த போராட்டம் நடாத்தப்பட்டது.

இதன்போது "அதி வேகத்தை குறைப்போம் விபத்துகளைத் தவிர்ப்பபோம், அபிநயனின் மரணத்திற்கு முறையான விசாரணை வேண்டும், மாணவர்களது உயிரைப் பறிக்காதே" 

என்ற வாசகங்கள் உள்ளடங்கிய பதாதைகளை ஏந்தி கோஷமிட்டவாறு கவனயீர்ப்பில் ஈடுபட்டனர். சமூக செயற்பாட்டாளர் பி.தனுசியா தலைமையில் நடைபெற்ற இக் கவனயீர்ப்பில் 

வலி,மேற்கு பிரதேச சபையின் உறுப்பினர் க.இலங்கேஸ்வரன், சமூக செயற்பாட்டாளர் மா.நாகரட்ணம், மாணவர்கள், பெற்றோர்கள், பொதுமக்கள் எனப்பலரும் கலந்துகொண்டனர்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு