யாழ்.மாவட்டத்தில் அமைக்கப்பட்டிருந்த கொரோனா இடைத்தங்கல் நிலையங்களில் நடந்த பகல் கொள்ளை! கணக்காளருக்கு அதிரடி இடமாற்றம்...

ஆசிரியர் - Editor I
யாழ்.மாவட்டத்தில் அமைக்கப்பட்டிருந்த கொரோனா இடைத்தங்கல் நிலையங்களில் நடந்த பகல் கொள்ளை! கணக்காளருக்கு அதிரடி இடமாற்றம்...

யாழ்.மாவட்டத்தில் அமைக்கப்பட்டிருந்த கொரோனா இடைத்தங்கல் நிலையங்களில் மோசடிகள் இடம்பெற்றதாக குற்றச்சாட்டு எழுந்திருக்கும் நிலையில் யாழ்.பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையின் கண்காளருக்கு திடீர் இடமாற்றம் வழங்கப்பட்டிருக்கின்றது. 

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, யாழ்.மாவட்டத்தில் கொரோனா நெருக்கடி காலகட்டத்தில் மருதங்கேணி, நாவற்குழி மற்றும் வட்டுக்கோட்டை பகுதிகளில் அமைக்கப்பட்ட கொரோனா இடைத்தங்கல் நிலையங்கள் பின்னர் அகற்றப்பட்டது. 

இதன்போது குறித்த இடைத்தங்கல் நிலையங்களில் இருந்த பல லட்சம் ரூபா பொருட்கள் வரவுப் புத்தகத்தில் பதிவேற்றம் செய்யப்படாமல் மாயமாகியுள்ளன. குறித்த விடயம் ஊடகங்கள் வாயிலாக அம்பலமான நிலையில், விடயம் தொடர்பில் பிரதமர் அலுவலகம் வடமாகாண ஆளுனரை விசாரணை செய்யுமாறு கோரிக்கை விடுத்தது.

இந்நிலையில் விசாரணைகளை தடையின்றி மேற்கொள்வதற்காக யாழ்.பிராந்திய சுகாதார பணிமனையின் கடமையாற்றும் கணக்காளருக்கு இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளதோடு விரைவில் அவரது இடத்துக்கு பெண் கணக்காளர் ஒருவர் நியமிக்கப்படவுள்ளார்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு