புதையல் தேடிய யாழ்ப்பாண பூசகர் மற்றும் நகரசபை உறுப்பினர் உட்பட 6 பேர் கைது..!

ஆசிரியர் - Editor I
புதையல் தேடிய யாழ்ப்பாண பூசகர் மற்றும் நகரசபை உறுப்பினர் உட்பட 6 பேர் கைது..!

ஆராச்சிக்கட்டுவ - மானாவொிய பகுதியில் புதையல் தோண்டிய யாழ்ப்பாணத்தை சேர்ந்த பூசகர் மற்றும் நகரசபை உறுப்பினர்கள் உட்பட 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவை பிரதிநிதித்துவப்படுத்தும் சிலாபம் நகரசபை உறுப்பினர், அவரது இரண்டு மகன்கள் 

மற்றும் யாழ்ப்பாணம், கண்டியைச் சேர்ந்த மூவரே சிலாபம் குற்றப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைதானவர்களுள் யாழ்ப்பாணத்தை சேர்ந்த பூசாரியும் அடங்குவதாக தெரிவிக்கப்படுகின்றது.

புதையல் தோண்ட பயன்படுத்தப்பட்ட கருவிகள், பலி கொடுக்கப்பட்ட இரண்டு கோழிகள் உள்ளிட்ட மேலும் சில பொருட்கள் கைப்பற்றப்பட்டன.

சந்தேகநபர்கள் ஆராச்சிக்கட்டுவ, மானாவெரிய பிரதேசத்தில் புதையல் தேடி குழி தோண்டிக் கொண்டிருந்தபோது, ​​

கிடைத்த இரகசிய தகவலையடுத்து பொலிஸார் சுற்றிவளைத்து அவர்களை கைது செய்தனர். இதனையடுத்து கைதான சந்தேக நபர்களை 

பொலிஸார் நீதிமன்றில் முற்படுத்திய நிலையில் சிலாபம் நீதவான் ஏப்ரல் 20 வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டுள்ளார்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு