யாழ்.நெடுந்தீவு கடலில் காணாமல்போன கடற்படை சிப்பாய் சடலமாக மீட்பு..!

ஆசிரியர் - Editor I
யாழ்.நெடுந்தீவு கடலில் காணாமல்போன கடற்படை சிப்பாய் சடலமாக மீட்பு..!

யாழ்.நெடுந்தீவு கடற்பகுதியில் கடத்தல்காரர்களை முற்றுகையிட முயற்சித்தபோது இடம்பெற்ற விபத்தில் கடலில் மூழ்கி காணாமல்போன கடற்படை சிப்பாய் அனலைதீவு கடலில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். 

கடத்தல்காரர்களின் படகு ஒன்றை நேற்றய தினம் அதிகாலை முற்றுகையிட முயற்சித்தபோது இரு கடற்படை படகுகள் மோதி விபத்துக்குள்ளாகியிருக்கின்றது. இதன்போது 3 கடற்படை சிப்பாய்கள் கடலில் மூழ்கிய நிலையில்

இருவர் மீட்கப்பட்டதுடன் ஒருவர் காணாமல்போயிருந்தார். காணாமல்போயிருந்த கடற்படை சிப்பாய்யை தேடும் பணிகள் துரிதப்படுத்தப்பட்டிருந்த நிலையில் அனலைதீவு கடற்பகுதியிலிருந்து 

சிப்பாயின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. சடலமாக மீட்கப்பட்டவர் கம்பளையைச் சேர்ந்த சாகர பியந்த ஜயசேகர (வயது 27) என்ற கடற்படை சிப்பாய் என கூறப்படுகின்றது. 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு