யாழ்.நவாலி பகுதியில் வன்முறைக் கும்பல் வீடு புகுந்து அட்டகாசம்! முச்சக்கர வண்டி தீக்கிரை..

ஆசிரியர் - Editor I
யாழ்.நவாலி பகுதியில் வன்முறைக் கும்பல் வீடு புகுந்து அட்டகாசம்! முச்சக்கர வண்டி தீக்கிரை..

யாழ்.நவாலி பகுதியில் நேற்றிரவு இனந்தெரியாத வன்முறைக் கும்பல் வீடொன்றின் மீது தாக்குதல் நடத்தியுள்ளதுடன்ன், வீட்டின் முன்னால் நிறுத்தப்பட்டிருந்த முச்சக்கர வண்டி தீக்கிரையாக்கப்பட்டுள்ளது.

நவாலி - ஆனந்தா வீதி பகுதியில் உள்ள வீடொன்றினுள் நேற்றைய தினம் திங்கட்கிழமை இரவு இரண்டு மோட்டார் சைக்கிளில் வந்த 06 பேர் கொண்ட வன்முறை கும்பல் 

வீட்டின் முன் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த முச்சக்கர வண்டியை அடித்து நொறுக்கிவிட்டு அதற்கு தீ வைத்த பின்னர் அங்கிருந்து தப்பி சென்றுள்ளனர். 

சம்பவம் தொடர்பில் மானிப்பாய் பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டதனை அடுத்து , பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.


பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு