உக்ரைன் தலைநகரில் இராணுவ நடவடிக்கை குறைக்கப்படும்!! -ரஷியா அறிவிப்பு-

ஆசிரியர் - Editor II
உக்ரைன் தலைநகரில் இராணுவ நடவடிக்கை குறைக்கப்படும்!! -ரஷியா அறிவிப்பு-

ரஷியா - உக்ரைன் நாடுகளுக்கு இடையிலான பேச்சுவார்த்தையின் போது கீவ் நகரில் இராணுவ நடவடிக்கையை தீவிரமாக குறைப்பதாக ரஷியா தெரிவித்துள்ளது.

இரு நாடுகளுக்கும் இடையில் தற்போது போர் நிறுத்தத்திற்கான பேச்சுவார்த்தையும் நடைபெற்று வருகிறது. இருநாட்டு அதிகாரிகள் அளவிலான பேச்சுவார்த்தைகளில் எந்த உடன்பாடும் எட்டப்படவில்லை.

இந்த நிலையில் 2 ஆவது கட்ட பேச்சுவார்த்தை இஸ்தான்புல் நகரில் நடைபெற்றது. இந்த பேச்சுவார்த்தையின்போது உக்ரைன் தலைநகர் கீவ் மற்றும் செர்னிகிவ் நகரில் இராணுவ நடவடிக்கையை மிகத் தீவிரமாக குறைப்பதாக ரஷியா தெரிவித்துள்ளது.

இதுகுறித்து ரஷியாவின் பேச்சுவார்த்தைக்குழுவில் இடம் பிடித்திருந்த பேச்சுவார்த்தையாளர்கள், உக்ரைன் நடுநிலை மற்றும் அணு ஆயுதம் இல்லாத நிலை ஆகியவற்றை நோக்கி நகர்வதால் இந்த பேச்சுவார்த்தையில் எங்களை இந்த முடிவை எடுக்க வைத்தள்ளது என்றனர்.

பேச்சுவார்த்தைக்குழுவின் தலைவர் விளாடிமிர் மெடின்ஸ்கி ‘‘பேச்சுவார்த்தையில் அர்த்தமுள்ள விவாதங்கள் இருந்தன. உக்ரைனின் முன்மொழிவுகள் அதிபர் புதினிடம் வழங்கப்படும்’’ என்றார்.


காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு