யாழ்.வலி,வடக்கு பிரதேசசபை உறுப்பினர்கள் விலையேற்றத்தை கண்டித்து போராட்டம்..!

ஆசிரியர் - Editor I
யாழ்.வலி,வடக்கு பிரதேசசபை உறுப்பினர்கள் விலையேற்றத்தை கண்டித்து போராட்டம்..!

பொருட்களின் விலையேற்றம் மற்றும் எரிபொருள் விலையேற்றம் ஆகியவற்றை கண்டித்து யாழ்.வலிவடக்கு பிரதேச சபை உறுப்பினர்களால் சைக்கிள் பேரணி ஒன்று நடத்தப்பட்டிருக்கின்றது. 

மல்லாகத்திலிருந்து  - வலிவடக்கு பிரதேசசபை வரை சைக்கிள் பேரணியாகச் சென்று தமது எதிர்ப்பை வெளியிட்டுள்ளனர். பிரதேச சபையின் மாதாந்த அமர்வு இன்றைய தினம் இடம்பெறவுள்ள நிலையில் 

தற்போதைய பொருள் விலையேற்றத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் முகமாக வலி,வடக்கு பிரதேச சபையின் சகல பிரதேசசபை உறுப்பினர்களும் சைக்கிளில் பிரதேசசபை அமர்வுக்கு பேரணியாக சென்று 

எதிர்ப்பினை வெளியிட்டுள்ளனர்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு