யாழ்.தென்மராட்சி பிரதேச கோவில்களில் பங்குனி திங்கள் பொங்கல் விழாவில் பங்குகொள்ள 3 தடுப்பூசிகளையும் பெற்றிருப்பது கட்டாயம்..!

ஆசிரியர் - Editor I
யாழ்.தென்மராட்சி பிரதேச கோவில்களில் பங்குனி திங்கள் பொங்கல் விழாவில் பங்குகொள்ள 3 தடுப்பூசிகளையும் பெற்றிருப்பது கட்டாயம்..!

யாழ்.தென்மராட்சி பிரதேசத்தில் பங்குனி திங்கள் பொங்கல் விழா நடைபெறும் கோவில்களில் 3 தடுப்பூசிகளையும் பெற்ற பக்தர்கள் மட்டும் கலந்துகொள்ளவேண்டும். எனவும் அதற்கான ஒழுங்குகளை செய்யுமாறும் தென்மராட்சி சுகாதார பிரிவினர் கோவில் நிர்வாகிகளுக்கு அறிவித்திருக்கின்றனர். 

இதற்கமைய கோவில் வாயிலில் கடமையிலுள்ள பொதுச் சுகாதார பரிசோதகர்கள் 3 தடுப்பூசிகளையும் ஏற்றிய தடுப்பூசி அட்டையை வைத்திருக்கும் பக்தர்களை மட்டும் உள்ளே செல்வதற்கு அனுமதிப்பார்கள். பரிசோதனையில் 3 தடுப்பூசிகளையும் செலுத்தாத பக்தர்கள் கோவிலுக்கு உள் செல்ல அனுமதிக்கப்படாது. 

அத்துடன் அன்னதானம் பொதி செய்து வழங்க அனுமதி வழங்கப்பட்டுள்ள நிலையில் அன்னதானத்திற்கான சமையலில் ஈடுபடுவோரும் 3 தடுப்பூசிகளையும் செலுத்தியிருக்கவேண்டும். என சுகாதார வைத்திய அதிகாரி பணியகத்தின் மருத்துவ சான்றிதழ் பெற்றவர்களாகவும் இருத்தல்வேண்டும். 

என சுகாதார பிரிவினர் மேலும் கூறியுள்ளனர். 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு