யாழ்.பருத்தித்துறை மாலுச்சந்தி - மந்திகை இடையில் விபத்து..! 5 பேர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதி..

ஆசிரியர் - Editor I
யாழ்.பருத்தித்துறை மாலுச்சந்தி - மந்திகை இடையில் விபத்து..! 5 பேர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதி..

யாழ்.பருத்தித்துறை மந்திகை - மாலுசந்தி இடையில் இன்று மாலை இடம்பெற்ற விபத்தில் 5 பேர் காயமடைந்திருக்கின்றனர். 

பருத்தித்துறை நோக்கி சென்றுகொண்டிருந்த முச்சக்கர வண்டியும், நெல்லியடி நோக்கி கொண்டிருந்த மோட்டார் சைக்கிளும் மோதிக்கொண்டதில் 

5 பேர் காயமடைந்த நிலையில் பருத்தித்துறை ஆதார வைத்திய சாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இதில் மோட்டார் சைக்கிளில் பயணித்தவர் தனது இரண்டு பிள்ளைகளையும் பாடசாலையிலிருந்து ஏற்றிவந்தபோதே 

முச்சக்கரவண்டியுடன் மோதுண்டு விபத்து இடம் பெற்றுள்ளது. இது தொடர்பான விசாரணைகளை நெல்லியடி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு